நேபாள தூதரகத்தில் ராஜ்நாத் சிங்! இரங்கல் குறிப்பேட்டில் கையெழுத்து!
நேபாள தூதரகத்துக்கு ராஜ்நாத் சிங் நேரில் சென்றது பற்றி...
தில்லியில் உள்ள நேபாள தூதரகத்துக்கு திங்கள்கிழமை நேரில் சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரங்கல் குறிப்பேட்டில் கையெழுத்திட்டு இரங்கல் தெரிவித்தார்.
நேபாள - திபெத் எல்லையில் பனிப்பாறைகள் உடைந்து நேபாளத்தின் போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டது.
இந்த பேரிடரில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிய நிலையில், இதுவரை 900-க்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும், காணாமல் போன 4,200 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தில்லியில் உள்ள நேபாள தூதரகத்துக்கு திங்கள்கிழமை நேரில் சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அரசு சார்பில் இரங்கல் குறிப்பேட்டில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக இரங்கலை பதிவு செய்தார்.
ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பதாவது:
”ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் நேரிட்ட உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதங்கள் குறித்து, நேபாள மக்களுக்கும் அந்நாட்டு அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துயரமான இயற்கை பேரிடர், நேபாள குடிமக்களுடன் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினரையும் பாதித்துள்ளது. இத்துயர நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறோம்.
நெருங்கிய நண்பராகவும், கூட்டாளியாகவும், சுக, துக்கங்களில் பங்கெடுக்கும் தோழராகவும் இந்தியா எப்போதும் நேபாளத்துக்குத் துணையாக இருந்து வந்துள்ளது. இந்த கடினமான சூழலிலும், எங்கள் நேபாள சகோதர சகோதரிகளுடன் தோளோடு தோள் நின்று, தேடுதல், மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் நேபாளத்துக்குத் தேவையான உதவிகளை வழங்க நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Rajnath Singh at the Nepal Embassy! Signs the condolence book!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.