பவன் கேரா 
இந்தியா

ராணுவத்தை கைவிட்டு கோழைத்தனமாக பின்வாங்கிய மோடி! பவன் கேரா

ராணுவத்தை கைவிட்டு கோழைத்தனமாக மோடி பின்வாங்கியதாக காங்கிரஸ் விமர்சித்திருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

முக்கியமான நேரத்தில் இந்திய ராணுவத்தை கைவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி கோழைத்தனமாகப் பின்வாங்கியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார்.

இந்திய எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியபோது, பதிலடி கொடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு தாமதப்படுத்தியதாக முன்னாள் ராணுவத் தளபதி எம்எம் நரவணே எழுதியிருக்கும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய நிலையில், இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பவன் கேரா தெரிவித்திருப்பதாவது:

”ராணுவத்திற்குத் தெளிவு, ஆதரவு மற்றும் அரசியல் உறுதிப்பாடு தேவைப்பட்டபோது, ​​நரேந்திர மோடி கோழைத்தனமாகப் பின்வாங்கி இருக்கிறார்.

சீனாவுடனான நேரடி ராணுவ மோதலின்போது அவர் நமது ராணுவத்தைக் கைவிட்டார். மேலும் மிகவும் முக்கியமான நேரத்தில் அரசியல் தலைமை இல்லாத நிலையில் நாட்டை விட்டுவிட்டார்.

அந்த 56 அங்குல மார்பு 'நாடகம்' முடிந்துவிட்டது. நரேந்திர சரண்டர் மோடி ஒரு கோழை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Modi abandoned the army and retreated cowardly! - Pawan Khera

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பை: சதமடித்த ஆப்கன் வீரர் ரொனால்டோ பாணியில் கொண்டாட்டம்!

பிரம்மாண்டமாக உருவாகும் தனுஷ் - 55!

சீனப் படைகள் எல்லைக்குள் ஊடுருவியபோது மோடியின் பதில் என்ன?

இந்தியா மிகவும் ஆபத்தான அணி; ஆனால்... எம்.எஸ்.தோனி கூறுவதென்ன?

புதிய தொடரில் மீண்டும் இணையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி!

SCROLL FOR NEXT