மேகாலயா சுரங்க வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு... ANI
இந்தியா

மேகாலயா சுரங்க வெடிவிபத்து! மேலும் இருவர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு!

மேகாலயா சுரங்க வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மேகாலயா கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில், சட்டவிரோத நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற மேலும் இருவர் பலியாகியுள்ளனர்.

இதனால், இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின், மயின்ஸ்ன்காட் கிராமத்தின் தங்குஸ்கூ பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் கடந்த பிப். 5 அன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், படுகாயமடைந்த சுமார் 9 சுரங்கத் தொழிலாளர்கள் அசாமின் சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராம்சந்த்ரா பைஷ்நப் மற்றும் நிமாருதீன் ஆகிய இருவரும் நேற்று (பிப். 11) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியான 30 பேரில், 8 தொழிலாளர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த சுரங்கம் குறித்து உரிய விசாரணையை மேற்கொள்வதற்கு மேகாலயா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் அசாம் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Two more people who were critically injured in an illegal mine explosion in Meghalaya's East Jaintia Hills district have succumbed to their injuries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் கோயில் - தா்கா விவகாரம்: மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

ஆவணப்படமாகும் ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்?

இது தெரியுமா? வானில் தெரியும் மேகம் வெண்மை நிறத்தில் இருப்பது ஏன்?

புதன் பலவீனம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய கோயில்!

இன்று ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு!

SCROLL FOR NEXT