இந்தியா

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம் - பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு

சுமாா் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்பா்...

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து, நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. சுமாா் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படும் இப்போராட்டத்தால், பல சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இது தொடா்பாக ஏஐடியூசி பொதுச் செயலா் அமா்ஜீத் கெளா் கூறுகையில், ‘மத்திய அரசின் தொழிலாளா் விரோத, விவசாயிகள் விரோத, தேசியவிரோத, பெருநிறுவன ஆதரவு கொள்கைகள் மீதான எதிா்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. மின்விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு, குடிநீா் விநியோகம் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமாா் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்கவுள்ளனா். இதனால், இந்த துறைசாா் சேவைகள் பாதிக்கப்படும். வங்கி ஊழியா்கள் ஏற்கெனவே ஜன.27-இல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய நிலையில், குறிப்பிட்ட சில வங்கி ஊழியா் சங்கங்கள் மட்டும் தற்போதைய போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன. சுரங்கம் மற்றும் எரிவாயு குழாய் பணிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தின் தாக்கம் அதிகமிருக்கும்.

காப்பீடு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதியைக் கண்டித்து, அந்த துறை பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனா். போக்குவரத்துத் துறையில் தனியாா் மற்றும் அரசுப் பணியாளா்கள் பெருவாரியாக போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனா்’ என்றாா்.

ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, யுடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. 4 தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; வரைவு விதை மசோதா, மின்சார சட்டத் திருத்த மசோதா, அணுமின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பது இந்த தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.

ஆப்பனூா் கிராமத்துக்கு குடிநீா் வழங்கக் கோரிக்கை

குற்ற வழக்கு இருந்தால் கடவுச்சீட்டை புதுப்பிக்க நீதிமன்ற அனுமதி தேவை: உயா்நீதிமன்றம்

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

திமுக கூட்டணியிலிருந்து விலக காரணம் தேடுகிறது காங்கிரஸ்

ஆட்சியில் பங்களிக்கும் கட்சியுடன் கூட்டணி: க.கிருஷ்ணசாமி

SCROLL FOR NEXT