ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் கலந்து கொள்வதில் என்ன தவறு என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டது குறித்து ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், சல்மான் கான் ஓர் இந்தியர். அவர் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை நம்புகிறவர். அவரை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு அழைப்பதில் என்ன தவறு?
ஆர்எஸ்எஸ் ஒரு தேச பக்தி கொண்ட அமைப்பு. ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒவ்வொரு பிரிவிலும் தேச பக்தி ஊக்குவிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் கலந்து கொள்வது அவருக்கான அழைப்பா அல்லது இந்து சங்கங்களில் முஸ்லிம்களும் வரவேற்கப்படுகிறார்கள் என்ற அறிவிப்பா? என்று சிவசேனையின் (உத்தவ் தாக்கரே) கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில்தான், சிவசேனையின் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.