கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா
மேற்கு வங்க பெயர் மாற்றக் கோரிக்கை பற்றி..
கேரள மாநிலத்தின் பெயரை மாற்றும் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மேற்கு வங்க அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள அரசின் பெயரைக் கேரளம் என மாற்றுவதற்கான கேரள அரசின் முன்மொழிவை மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை அங்கீகரித்தது.
கேரள மாநில பெயரை மாற்றிய நிலையில், தனது மாநிலத்தின் பெயரையும் மாற்றும் திட்டம் நீண்ட காலமாக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிருப்தி தெரிவித்தார்.
Advertisement
இந்த நிலையில், கேரளத்தை மாற்ற முடியும் என்றால் ஏன் மேற்கு வங்க பெயரை மாற்ற முடியாது? என மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா,
மற்ற மாநிலங்களும் பெயர் மாற்றங்களை முன்மொழிந்துள்ளன. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
எதிர்காலத்தில் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் இதேபோன்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்டால், மத்திய அரசு அதற்கு உரிய பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
காஷ்மீர் வருகை தந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனையும் முதல்வர் வரவேற்றார். காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.
குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாகக் காஷ்மீருக்கு வருகை தந்துள்ள நிலையில் நாங்கள் அவரை வரவேற்கிறோம் என்று உமர் அப்துல்லா கூறினார்.
Jammu and Kashmir Chief Minister Omar Abdullah on Wednesday said the Centre should accept the West Bengal government's demand to rename the state, following the Union Cabinet's approval of a similar proposal for Kerala.