முகப்பு
இந்தியா

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 6:00 PM
மகாராஷ்டிர துணை முதல்வர் சுநேத்ரா பவார்
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 5:47 PM

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர துணை முதல்வரான சுநேத்ரா பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த தலைவரான பிரஃபுல் படேல் அறிவித்துள்ளார்.

மும்பையில் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களாலும் ஒருமனதாக சுநேத்ரா பவார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 5:58 PM

மேலும், புதிய தலைமையின்கீழ் ஒற்றுமையுடனும் வலிமையுடனும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் படேல் கூறினார்.

முன்னதாக, மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜீத் பவார் ஜன. 28 ஆம் தேதி பாராமதியில் நேரிட்ட விமான விபத்தில் பலியானார். இதையடுத்து, அவரது மனைவி சுநேத்ரா பவார் கடந்த ஜனவரி 31-ல் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

summary

Maharashtra Deputy CM Sunetra Pawar elected as the National President of NCP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.