FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜந்தர் மந்தரில் இருந்து என்னை வெளியேற்றினால்..! 13வது நாளாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்!

நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வலியுறுத்தி ஆர்வலர் சோனம் வாங்சுக் 13 ஆவது நாளாக உண்ணாவிரதம்...

Updated On : 10 ஜூலை 2026, 1:09 pm IST
13 ஆவது நாளாக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்... - Instagram/CJP
பகிர்:

நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்வலர் சோனம் வாங்சுக் 13 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தில்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில், லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 முதல் உண்ணாவிரதம் கடைபிடித்து வருகிறார். மத்திய அரசு நீட் வினாத்தாள் கசிவுக்கு நடவடிக்கை எடுக்கும் வரையில் தனது போராட்டம் தொடரும் என அவர் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, செய்தியாளர்களுடன் இன்று (ஜூலை 10) அவர் பேசுகையில்,

“ஜந்தர் மந்தரில் இருந்து என்னை வெளியேற்ற அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டால் அது எனது உரிமைகளை மீறுவதாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரப்பான்பூச்சி மக்கள் கட்சி மற்றும் சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

இந்தப் போராட்டம் 21 ஆவது நாளாக இன்றும் நடைபெற்று வருவதால் தில்லி அதிகாரிகள் போராட்டக்காரர்களை வெளியேற்றும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

summary

Activist Sonam Wangchuk is observing a hunger strike for the 13th consecutive day for the NEET question paper leak.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments