நீட் வினாத்தாள் கசிவு: 3 பேருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் 3 பேருக்கு நீதிமன்றக் காவல் பற்றி..
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்த நிகழ்வு குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இயற்பியல் மொழிபெயர்ப்பாளர் மனிஷா சஞ்சய் ஹவால்டார், குழந்தை நல மருத்துவர் டாக்டர் மனோஷ் ஷிருரே, இயற்பியல் ஆசிரியர் தேஜஸ் ஹர்ஷத்குமார் ஷா ஆகிய மூவரையும் நீதிமன்றக் காவலில் வைக்கக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவைச் சிறப்பு நீதிபதி அஜய் குப்தா அனுமதித்தார்.
Advertisement
Advertisement