முகப்பு
இந்தியா

மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவு!

கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றுக்கொண்ட பிறகு நடந்த முதல் அமைச்சரவைக் கூடத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து...

Updated On : 3 ஜூன் 2026, 9:44 pm IST
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - ஏஎன்ஐ
பகிர்:

கர்நாடகத்தில் பள்ளி முதல் முதுகலை மாணவர்கள் வரை அனைத்து மாணவர்களும் கட்டணமின்றி பயணிக்கலாம் என முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று (ஜூன் 3) தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கு பயண அட்டை (பாஸ்) அவசியம் என்றும், போக்குவரத்துத் துறையுடன் ஆலோசித்து மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் இன்று (ஜூன் 3) பதவியேற்றுக்கொண்ட பிறகு நடந்த முதல் அமைச்சரவைக் கூடத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Advertisement

Advertisement

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுடன் டி.கே. சிவகுமார் பேசியதாவது:

''கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எவ்வித கட்டணமும் இன்றி அரசுப் பேருந்துகளில் பயணிக்கலாம். கட்டணமில்லா பேருந்து சலுகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பாக போக்குவரத்துத் துறையுடன் ஆலோசனை நடத்தப்படும்.

வேலையில்லா பட்டதாரிகள் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும். அவற்றைக் கொண்டு தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தகுதி வாய்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

கிராமங்களில் பாரத் ஜோடோ மன்றங்கள் உருவாக்கப்படும். இளைஞர்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல், இந்த மன்றங்கள் மூலம் ஆரோக்கியமாக வழிநடத்தப்படுவார்கள். இதற்காக அரசு சார்பில் ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தின் அனைத்து கிராமங்களிலும் 10,000 பாரத் ஜோடோ மன்றங்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

summary

Bus pass is free for all school and college students Karnataka CM D.K. Shivakumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.