ஜேஇஇ தரவுகள் கசிவு! கல்வி அமைச்சர் திறமையற்றவர்! கரப்பான்பூச்சி கட்சி
ஐஐடி நடத்திய ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியான சில நாள்களில், தரவுகள் கசிந்த விவகாரம் குறித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சி தெரிவித்த கருத்து.
ஐஐடி நடத்திய ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியான சில நாள்களில், தரவுகள் கசிந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு,மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறமையற்றவர் என்றும் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது. இதனையடுத்து, சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை கணினி வழியில் திருத்தியதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.
இதனைத் தொடர்ந்து, ஐஐடி நடத்திய ஜேஇஇ இரண்டாம் நிலைத் தேர்வெழுதிய ஏறக்குறைய 1.79 இலட்சம் மாணவர்களின் தரவுகள் இணையத்தில் பாதுகாப்பற்ற முறையில் கசிந்தன.
Advertisement
Advertisement
இது குறித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா பேசியதாவது:
சுமார் இரண்டு லட்சம் மாணவர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் மற்றும் புகைப்படங்கள் கசிந்துள்ளன. உலகெங்கிலும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை வழிநடத்தும் வல்லுநர்களை உருவாக்கிய ஒரு நாட்டில், கல்வி அமைச்சரும் அரசும் அடிப்படை அமைப்புகளைப் பாதுகாப்பாக முடியாத அளவுக்குத் திறமையற்றவர்களாக உள்ளனர்.
கல்வி அமைச்சர் முற்றிலும் திறமையற்றவர். அவர் கல்வி முறையைச் சீரழித்துவிட்டார். தர்மேந்திர பிரதானை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமரிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இது நமது மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம்.
ஒரு சாதாரண ஐஐடி இணையதளத்தைப் பாதுகாப்பாக முடியாது. 16, 17 மற்றும் 18 வயது இளைஞர்கள் பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கின்றனர் என்று தெரிவித்தார்