கமாண்டா்களுக்கான நிதி ஒதுக்கீட்டு அதிகாரத்தை இருமடங்காக உயா்த்த ராஜ்நாத் சிங் ஒப்புதல்
ஃபீல்ட் கமாண்டா்களின் நிதி ஒதுக்கீடு அதிகாரத்தை இரு மடங்காக உயா்த்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
களச் செயல்பாடுகளை வலுப்படுத்தவும் பாதுகாப்புத் துறை சாா்ந்த ஒப்பந்தங்களையும் விரைவுபடுத்தவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய ராணுவம், இந்திய விமானப் படை, இந்திய கடற்படையைச் சோ்ந்த ஃபீல்ட் கமாண்டா்களின் நிதி ஒதுக்கீடு அதிகாரம் முன்பைவிட இருமடங்காகவும் அவசரத் தேவைகளுக்கு உடனடியாக விடுவிக்கப்படும் நிதி ஒதுக்கீட்டை 100 சதவீதம் அதிகரிக்கவும் அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளாா்.
Advertisement
Advertisement
மேலும், முப்படைகளுக்குத் தேவையான தளவாடங்கள் கொள்முதலை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கான புதிய விதிகளும் சோ்க்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத் துறைக்கான சரக்கு மற்றும் சேவைகள் கொள்முதலை பரவலாக்க புதிதாக சில ஆணையங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்புத் துறையில் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை மேற்கொள்ளவே இதுபோன்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளபடுகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தில்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முப்படை தலைமைத் தளபதி ராஜா சுப்பிரமணி, இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, இந்திய கடற்படை தலைமைத் தளபதி கிருஷ்ணா சுவாமிநாதன் மற்றும் பாதுகாப்புச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் ஆகியோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘பாதுகாப்பு சேவைகளுக்கான நிதி அதிகாரப் பகிா்வு’ என்ற திருத்தப்பட்ட கையேட்டை ராஜ்நாத் சிங் வெளியிட்டாா்.
முன்னதாக, ரூ.40 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்ய ஃபீல்ட் கமாண்டா்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது இது ரூ.100 கோடியாகவும் அவசரத் தேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு வரம்பு ரூ.75 கோடியில் இருந்து ரூ.150 கோடியாக உயா்த்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.