எல்பிஜி சிலிண்டர் விலையேற்றம் தவிர்க்க இயலாதது - மத்திய அரசு
சிலிண்டர் விலையேற்றம் பற்றி நாங்களும் மிகுந்த கவலையும் வருத்தமும் கொள்கிறோம் - மத்திய அரசு
எல்பிஜி சமையல் எரிவாயு உருளைகளின் விலை உயர்த்தப்பட்டது தவிர்க்க இயலாதது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
வீடுகளில் சமையல் பயன்பட்டுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலை ஜூன் 7 முதல் ரூ. 29 மேலும் உயர்த்தப்பட்டுள்ளதற்கு கண்டனம் வலுக்கிறது. கடந்த 3 மாதங்களில் இரண்டாவது முறையாக எல்பிஜி விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைப் பற்றி, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “எரிவாயு சிலிண்டர் விலையேற்றம் பற்றி நாங்களும் மிகுந்த கவலையும் வருத்தமும் கொள்கிறோம். ஆனால், விமர்சனங்களைச் சுமத்துவதற்கு முன், ஒவ்வொருவரும் ஒட்டுமொத்த உலகிலும் உள்ள நிலவரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உலகம் மிகத் தீவிரமான பிரச்சினைகளில் சுழன்று கொண்டிருக்கிறது’ என்றார்.
Advertisement
Advertisement