FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிகாரில் 4 விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் மாநிலம், ஒளரங்காபாத் மாவட்டத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த நான்கு சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

Updated On : 9 ஜூன் 2026, 12:56 am IST
பகிர்:

பிகாா் மாநிலம், ஒளரங்காபாத் மாவட்டத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த நான்கு சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இதுகுறித்து ஒளரங்காபாத் மாவட்ட அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பக்தா்கள், புத்த கயா சென்றுவிட்டு வாரணாசிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனா். முபாசில் பகுதியில் பேருந்து வந்தபோது எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நோ் மோதியது. இதில் பேருந்தில் பயணித்த ஆந்திரத்தை சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.

மேலும் பலா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்தின் காரணமாக அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தாத்பி மோா் பகுதியில் காரும், டிராக்டரும் மோதிய மற்றொரு விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். அவா்கள் மூவரும் பெண்கள் ஆவா். விபத்துக்கு டிராக்டா் ஓட்டுநரே காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தேஜ்புரா பகுதியில் ஆட்டோ ரிக்ஷாவும் காரும் மோதிக் கொண்ட விபத்தில், ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்த தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா். 9 போ் காயமடைந்தனா்.

நபிநகரில் வேனுடன் மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். வேன் ஓட்டுநரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments