முகப்பு
இந்தியா

சைபர் கிரைம் மோசடியில் தாய்லாந்து தப்பியோடியவர் கைது

சைபர் கிரைம் மோசடியில் தேடப்பட்டு வந்த கணேஷ் பாலசோ காலேவை இந்தியாவுக்கான தாய்லாந்து தூதரகத்தின் உதவியுடன் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

Updated On : 11 ஜூன் 2026, 12:07 pm IST
கணேஷ் பாலசோ காலே - ANI
பகிர்:

சைபர் கிரைம் மோசடியில் தேடப்பட்டு வந்த கணேஷ் பாலசோ காலேவை இந்தியாவுக்கான தாய்லாந்து தூதரகத்தின் உதவியுடன் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இணைய வழியாக பகுதிநேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்த புகாரில் கணேஷ் பாலசோ காலே தேடப்பட்டு வந்தார். ஆனால், அவர் தாய்லாந்துக்கு தப்பியோடியதாகக் கூறப்படும் நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், கணேஷ் பாலசோவை தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்தநிலையில், அவரை நாடு கடத்துமாறு தாய்லாந்து அரசுக்கு இந்திய வெளியுறவு உள்துறை அமைச்சகம் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் கோரியது.

Advertisement

Advertisement

இதனையடுத்து, கணேஷ் பாலசோ நாடுகடத்தப்பட்டு, மும்பை விமான நிலையம் வந்தடைந்த நிலையில், அவரை மகாராஷ்டிர சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

summary

CBI, in coordination with the MEA, MHA, and the Indian Embassy in Thailand, secured Ganesh Balaso Kale’s deportation to India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.