ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
புதிய ராணுவத் தலைமைத் தளபதி நியமனம் செய்யப்பட்டுள்ளது பற்றி....
இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி ஜூன் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதையடுத்து, புதிய ராணுவத் தலைமைத் தளபதியை மத்திய அரசு நியமித்துள்ளது.
அதன்படி தற்போது ராணுவ துணைத் தளபதியாக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத், ராணுவ தலைமைத் தளபதியாக பதவி உயர்வு பெறுகிறார். ஜூன் 30 ஆம் தேதி அவர் பதவியேற்கிறார். முன்னதாக அவர் தென் மேற்கு கமாண்ட் தலைவராக இருந்தார்.
Advertisement
Advertisement
புணே கடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாதெமியின் முன்னாள் மாணவர் ஆவார். சுமார் 40 ஆண்டுகளாக ராணுவப் பணியில் இருக்கிறார். ராணுவ நவீனமயமாக்கல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
Lieutenant General Dhiraj Seth has been appointed Chief of the Army Staff
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.