முகப்பு
இந்தியா

மதுரை டூ மத்திய அரசு: யுபிஎஸ்சி தேர்வில் வாடிப்பட்டி ராஜேஸ்வரி இரண்டாமிடம்! இது முதல் சாதனை அல்ல..

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, அகில இந்திய அளவில் இரண்டாமிடம்

Updated On : 6 மார்ச், 2026 at 11:24 AM
ராஜேஸ்வரி
பகிர்:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே, தரவரிசைப் பட்டியலில் முதல் 5 இடங்களில் ஒரே பெண்மணியாகத் திகழ்கிறார்.

2018-ல் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மின்பொறியியல் படிப்பை முடித்த ராஜேஸ்வரி, ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முதலிடம் பிடித்து, துணை ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார்.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு, தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 958 பேரை சிவில் சர்வீஸ் பணிகளுக்குத் தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளது.

அகில இந்திய அளவில் ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த அனுஜ் அக்னிஹோத்ரி முதலிடமும், மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாமிடமும், சண்டிகரை சேர்ந்த அகான்ஷ் துல் மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.

summary

Journey of Rajeshwari Suve M, who transitioned from being a TNPSC Group I topper (Deputy Collector) to achieving All India Rank 2 in the UPSC Civil Services Examination 2025

முழு கட்டுரையைப் படிக்க →