FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மதுரை டூ மத்திய அரசு: யுபிஎஸ்சி தேர்வில் வாடிப்பட்டி ராஜேஸ்வரி இரண்டாமிடம்! இது முதல் சாதனை அல்ல..

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, அகில இந்திய அளவில் இரண்டாமிடம்

Updated On : 6 மார்ச் 2026, 4:54 pm IST
ராஜேஸ்வரி - DNS
பகிர்:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே, தரவரிசைப் பட்டியலில் முதல் 5 இடங்களில் ஒரே பெண்மணியாகத் திகழ்கிறார்.

2018-ல் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மின்பொறியியல் படிப்பை முடித்த ராஜேஸ்வரி, ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முதலிடம் பிடித்து, துணை ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

Advertisement

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு, தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 958 பேரை சிவில் சர்வீஸ் பணிகளுக்குத் தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளது.

அகில இந்திய அளவில் ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த அனுஜ் அக்னிஹோத்ரி முதலிடமும், மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாமிடமும், சண்டிகரை சேர்ந்த அகான்ஷ் துல் மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.

summary

Journey of Rajeshwari Suve M, who transitioned from being a TNPSC Group I topper (Deputy Collector) to achieving All India Rank 2 in the UPSC Civil Services Examination 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments