முகப்பு
இந்தியா

மணிப்பூர்: குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் உடல்கள் ஒப்படைப்பு

மணிப்பூர் குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மணிப்பூர்.
பகிர்:

மணிப்பூர் குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் த்ரோங்லாபியில் கடந்த 7ஆம் தேதி நடந்த குண்டுவீச்சுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலியாகினர். இதனால் ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பரவலான வன்முறை போராட்டங்கள் வெடித்தன. அதைத்தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.

குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரி, குடும்பத்தினர் உடல்களைப் பெற்றுக்கொள்ள மறுத்து வந்தனர். இதையடுத்து, ஐந்து வயது சிறுவன் மற்றும் அவனது ஆறு மாத சகோதரியின் உடல்கள் இம்பாலில் உள்ள மண்டல மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் சவக்கிடங்கில் 25 நாட்களாக வைக்கப்பட்டிருந்தன.

Advertisement

இதனிடையே குழந்தைகளின் உடல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு முதல்வர் ஒய். கெம்சந்த் சிங் கடந்த 25ஆம் தேதி அவர்களது குடும்பத்தினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் குழந்தைகளின் உடல்கள் சனிக்கிழமை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து இறுதிச் சடங்கிற்காக குழந்தைகளின் உடல்கள் திறந்த வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது த்ரோங்லாபி செல்லும் வழியெங்கும் நூற்றுக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்று உடல்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

summary

The mortal remains of two children, who were killed in a bomb attack in Manipur's Bishnupur district in April, were handed over to family members on Saturday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.