உ.பி: சொந்த வயலில் தர்பூசணி பறித்த சிறுவன் கொலை
உத்தரப் பிரதேசத்தில் தர்பூசணி பறித்ததற்காக 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் தர்பூசணி பறித்ததற்காக 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் தனது குடும்பத்திற்குச் சொந்தமான வயலில் இருந்து தர்பூசணிகளை 13 வயது சிறுவன் பறித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சிறுவன் கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சோனி கேடா கிராமத்தில் வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
Advertisement
அந்த வயலை சிறுவனின் குடும்பத்தினர் தங்களது கூட்டாளிகளுக்கு குத்தகைக்கு விட்டிருந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதன் காரணமாக, ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்தக் கொலை தொடர்பாக ரியாசுதீன் மற்றும் ஷிராசுதீன் ஆகிய இருவர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக ஆக்ரா மேற்கு துணை ஆணையர் ஆதித்யா தெரிவித்தார்.
சிறுவனைத் தேடி வயலுக்குச் சென்ற அவனது சகோதரி உடலைக் கண்டெடுத்தார். உடல் மீட்கப்பட்டு கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமத்தில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
Two persons have been arrested after a 13-year-old boy was killed in Agra for allegedly plucking watermelons from a field owned by his family, police said on Saturday, adding that the incident has led to tension in the area.