FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

220 பேர் முயற்சியால் கடலுக்கடியில் தேசியக் கொடி! புதிய கின்னஸ் சாதனை

அந்தமான் - நிகோபார் தீவுகளின் கடற்கரையில் நீருக்கடியில் உலகின் மிகப்பெரிய தேசியக் கொடியை விரித்து, புதிய கின்னஸ் சாதனை

கடலுக்கடியில் தேசியக் கொடி - PTI
பகிர்:

அந்தமான் - நிகோபார் தீவுகளின் கடற்கரையின் நீருக்கடியில் உலகின் மிகப்பெரிய தேசியக் கொடியை விரித்து, புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

அந்தமான் - நிகோபார் தீவுகளின் சுற்றுலா மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து பறைசாற்றும்வகையில், ஸ்வராஜ் தீவிலுள்ள ராதாநகர் கடற்கரையில் கின்னச் உலக சாதனை படைக்க முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, அந்தமான் - நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் ஜோஷி தலைமையில், இந்திய கடற்படை, கடலோர காவற்படை, வனத்துறை உள்பட பல்வேறு அரசுத்துறையினர் மற்றும் ஸ்கூபா பயிற்சிபெற்ற தன்னார்வலர்கள் என 220-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து, 197 அடி நீளமும் 131 அடி அகலமும் கொண்ட இந்திய தேசியக் கொடியை நீருக்கடியில் விரித்து, புதிய சாதனை படைத்தனர்.

Advertisement

Advertisement

நீருக்கடியில் தேசியக் கொடியை விரித்து, புதிய கின்னஸ் சாதனை - PTI

இந்தச் சாதனையை முறைப்படி அங்கீகரித்து, கின்னஸ் உலக சாதனை அமைப்பின் நடுவர் ரிஷிநாத், அந்தமான் - நிகோபார் நிர்வாகத்திடம் சாதனைக்கான சான்றிதழை வழங்கினர்.

summary

Andaman unfurls world’s largest underwater flag

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments