கேரளத்துக்கு எருமைகள் கடத்தல்: 4 பேர் கைது!
கர்நாடகத்திலிருந்து கேரளத்துக்கு எருமை கடத்தல்...
மங்களூரு : கர்நாடகத்திலிருந்து கேரளத்துக்கு எருமை கடத்தலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகத்தின் ஹாவேரி மாவட்ட பகுதிகளிலிருந்து கேரளத்தின் தாலிப்பறம்பாவுக்கு வாகனம் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 27 எருமைகளை கர்நாடக போலீஸார் மீட்டனர். மங்களூரு எல்லைக்குள்பட்ட ஜப்பினமொகரு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 66-இல் சென்ற வாகனங்களை வழிமறித்து அதிகாலையில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது அந்த வாகனத்தில் எருமைகள் கடத்தப்பட்டதை போலீஸார் உறுதி செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் இது தொடர்பாக வழக்கு பதிந்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
summary