முகப்பு
இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு: மேலும் ஒரு பேராசிரியர் கைது!

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மேலும் ஒரு பேராசிரியர் கைது செய்யப்பட்டது குறித்து...

கைதுசெய்யப்பட்ட பேராசிரியர். - படம் - ஏஎன்ஐ
பகிர்:

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மேலும் ஒரு பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்த நிகழ்வு குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மற்றொரு முக்கியக் குற்றவாளியான, மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் உள்ள ஆர்.சி.சி. பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளரும் பேராசிரியருமான சிவராஜ் மோட்டேகான்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இவர், நீட் தேர்வுக்காக மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு ஒன்பது கிளைகள் உள்ளன. இதன் முக்கிய கிளை லாத்தூரில் அமைந்துள்ளது. அவரது நிறுவனம் மற்றும் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், அசல் தேர்வில் கேட்கப்பட்ட அதே கேள்விகளைக் கொண்ட வேதியியல் வினா வங்கி மீட்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை தில்லி, ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக், புணே, லாத்தூர் மற்றும் அஹ்லியநகர் ஆகிய இடங்களில் இருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, 9 பேர் காவலில் எடுக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட பத்தாவது நபரான சிவராஜ் மோட்டேகான்கரையும் கைதுசெய்து, சிபிஐ காவலில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Another professor has been arrested in connection with the NEET question paper leak case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.