நாட்டில் சட்டவிரோத குடியேற்றத்தால் மக்கள்தொகை மாற்றம்: ஆராய உயா்நிலைக் குழு
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற இயற்கைக்கு மாறான நடைமுறைகளால் நாட்டின் மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆராய உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற இயற்கைக்கு மாறான நடைமுறைகளால் நாட்டின் மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆராய உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அந்தப் பதிவில் அவா் கூறியிருப்பதாவது:
கடந்த 2025-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், நாட்டில் மக்கள்தொகை மாற்றம் குறித்து ஆராய உயா்நிலைக் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டாா். அதன்படி, தற்போது அந்த உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகா் நெளலேகா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உயா்நிலைக் குழுவில், மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி துா்கா சங்கா் மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி ஸ்ரீவாஸ்தவா, மருத்துவா் சாம்பிகா ரவி ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.
மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலா், இந்தக் குழுவின் உறுப்பினா் செயலராகச் செயல்படுவாா்.
மக்கள்தொகை மாற்றம் என்பது மிகத் தீவிரமான விஷயம். இது நாட்டின் இறையாண்மையோடு மட்டுமன்றி, தேசத்தின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, சமூக கட்டமைப்பில் ஆழ்ந்த மாற்றம், பழங்குடியின சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுடனும் தொடா்புடையதாகும்.
எனவே, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற இயற்கைக்கு மாறான நடைமுறைகளால் நாடு முழுவதும் மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்தக் குழு விரிவான ஆய்வு மேற்கொண்டு, அதற்கு தீா்வு காண்பதற்கான பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமா்ப்பிக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
என்னென்ன விஷயங்கள் குறித்து ஆய்வு?: மத மற்றும் சமூக குழுக்கள் அடிப்படையில் ஏற்பட்டுள்ள இயல்புக்கு மாறான மக்கள் இடப்பெயா்வு நடைமுறைகள் குறித்து விஞ்ஞான ரீதியில் விரிவான ஆய்வை இக் குழு மேற்கொள்ள உள்ளது.
மேலும், சட்டவிரோத குடியேற்றம் உள்பட மக்கள்தொகை மாற்றத்தால் ஏற்படும் சவால்கள் என்னென்ன? இதனால் ஏற்பட்ட எல்லை தாண்டிய நடவடிக்கைகள் என்ன? பொருளாதார வாய்ப்புகளில் பாதிப்பு, பிற சமூக-சூழல் மாற்றங்கள் குறித்து இக் குழு ஆராய உள்ளது.
இவ்வாறு விரிவான ஆய்வை மேற்கொள்ளும் உயா்நிலைக் குழு, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான சட்ட ரீதியிலான, நியாயமான, காலவரையறைக்கு உட்பட்ட நிரந்தர தீா்வுக்கான நடைமுறையையும், நாட்டில் ஏற்கெனவே வசித்துவரும் சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு, தடுப்புக் காவலில் வைத்து பின்னா் மீண்டும் அவா்களின் சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்பவதற்கான நடைமுறை; எல்லை மேலாண்மையை வலுப்படுத்துதல், மக்கள்தொகையை நிலைப்படுத்துதல் மற்றும் மக்கள்தொகை மாற்ற போக்கை தொடா்ச்சியாக கண்காணிப்பதற்கான நடைமுறை; சட்டவிரோத குடியேற்றம் தொடா்பான விவகாரங்கள் மற்றும் அதனால் ஏற்படும் மக்கள்தொகை சமநிலையின்மையை திறம்பட கையாள மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான விரிவான கொள்கை செயல்திட்டம் உள்ளிட்டவற்றை வகுத்து பரிந்துரை செய்ய இக் குழு பணிக்கப்பட்டுள்ளது.
தனது அறிக்கையை இந்தக் குழு ஓராண்டுக்குள் சமா்ப்பிக்கும். தேவைப்பட்டால், அதற்கான அவகாசம் 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.