முகப்பு
இந்தியா

பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பசு வதை தடுப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுப்பு தெரிவித்தது.

Updated On : 27 மே 2026, 3:43 am IST
உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

பசு வதை தடுப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுப்பு தெரிவித்தது.

பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை (மே 28) கொண்டாடப்படவுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அகில பாரத ஹிந்து மகாசபையின் முன்னாள் துணைத் தலைவா் சதீஷ் குமாா் என்பவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘பசு வதைத் தடுப்புச் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். அந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இறைச்சிக் கூடங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் வெளியிட உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பருண் குமாா் சின்ஹா, பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாக இந்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாகத்தான் இவ்வாறு தோன்றுமா? அவசரமில்லை’ என்றனா்.