உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை!
தமிழகத்தைச் சேர்ந்தவரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான வி. மோகனா பெயர் இடம்பெற்றுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 5 பேரை மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பல்லி, பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் வி. மோகனா ஆகியோரின் பெயர்களை கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை ஏற்றால், நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனமாகும் 2 ஆம் பெண் வழக்குரைஞராக மோகனா இருப்பார்.
Advertisement
Advertisement
summary