ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்!
ராஜஸ்தானில் புழுதிப் புயல் பற்றி..
ராஜஸ்தானின் பிகானேரில் சக்தி வாய்ந்த புழுதிப் புயல் வீசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று பிற்பகலில் ராஜஸ்தானின் பிகானேரில் திடீரென ஏற்பட்ட புழுதிப் புயலால் நகரின் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் கட்சித்திறன் வெகுவாகக் குறைந்து, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
அப்பகுதியிலிருந்து பகிரப்பட்ட காணொலிகளில், பலத்த காற்று அடர்த்தியான புழுதிப் புயல் வானத்தை அடர் ஆரஞ்சு-பழுப்பு நிறமாக மாற்றியது. அப்பகுதியில் சூறாவளி போல் காற்று வீசியதால் மரங்கள் குலுக்கி அசைந்தன. அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் வீடுகளுக்குள்ளே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
Advertisement
Advertisement
இந்தப் புழுதிப் புயல், வடமேற்கு இந்தியாவைப் பாதிக்கும் நிலையற்ற வானிலையின் ஒரு பகுதியாகும். அங்குக் கடுமையான வெப்பத்தைத் தொடர்ந்து பலத்த காற்று, புழுதிப் புயல்கள் மற்றும் பல பகுதிகளில் ஆங்காங்கே மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
A powerful dust storm swept across Rajasthan’s Bikaner on Saturday afternoon, engulfing parts of the city in a massive wall of dust and dramatically reducing visibility.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.