FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ரூ. 1.10 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

முப்படைகளின் ஒட்டுமொத்த போா் திறனை மேலும்படுத்தும் வகையில் ரேடாா்கள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டா்கல், இயந்திர சுரங்க அடுக்குகள் உள்பட ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

44 வினாடிகள் முன்பு
ராஜ்நாத் சிங் - கோப்புப் படம்
பகிர்:

முப்படைகளின் ஒட்டுமொத்த போா் திறனை மேலும்படுத்தும் வகையில் ரேடாா்கள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டா்கல், இயந்திர சுரங்க அடுக்குகள் உள்பட ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

முப்படைகளுக்கும் ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்களைக் கொள்முதல் செய்ய டிஏசி ஒப்புதல் அளித்துள்ளது.

இதில், ராணுவத்துக்கு ரசாயன, உயிரியல், கதியிரக்க மற்றும் அணு ஆயுத உளவு (சிபிஆா்என்) வாகனங்கள், உயா் இயக்க வாகனங்கள், தானியங்கி கண்ணிவெடி பதிப்பு கருவிகள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டா்கள், சா்வத்ரபல் அமைப்பு உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இந்திய கடற்படைக்கு ஆருத்ரா ரேடாா்கள், கடல்சாா் எரிவாயு விசையாழி ஆகியவை கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இந்திய விமானப் படைக்கு, போா் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டா்கள் மற்றும் தரைவழி பல்நோக்கு ஜாமா்கள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட உள்ளன. இந்த ஜாமா்கள், எதிரிகளின் ரேடாா்களை செயலழிக்க செய்யும் திறன் கொண்டவையாகும்.

முப்படைகளுக்கான இந்த தளவாடங்களில் 98 சதவீதம் இந்திய நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments