புத்தகம் படி...
புத்தகம் பார் புத்தகம் புத்தி தரும் புத்தகம்
புத்தகம் பார் புத்தகம்
புத்தி தரும் புத்தகம்
வாசிக்க வாசிக்க நம்மை
Advertisement
வசப்படுத்தும் புத்தகம்!
-
சித்திரங்கள் நிறைய உண்டு
சின்னச் சின்ன கதைகள் உண்டு
குட்டிக் குட்டித் தகவல்கள் உண்டு
குதூகலமான வண்ணம் உண்டு!
-
யானை புலி சிங்கத்தோடு
எத்தனையோ மிருகங்களு முண்டு
கதைகள் சொல்லி கவர்ந்திடும்
கருத்தாய்ப் பேசி கவர்ந்திடும்!
-
மரமும் மண்ணும் உண்டு
மலையும் ஆறும் உண்டு
பசுமை நிறைந்த காட்சியோடு
பசியை நீக்க அறிவோடு உண்டு!
வசீகரன், தேனாம்பேட்டை.