நீதிக் கதைகள்! விதூஷகனின் நுண்ணறிவு!
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.
ஒரு மன்னனின் அரசவையில் விதூஷகன் ஒருவன் நேரத்துக்கேற்றவாறு பேசுவதில் வல்லவனாக இருந்தான்.
மன்னன் ஒரு நாள் விதூஷகனிடம் உள்ளங்கையைக் காட்டி என் உள்ளங்கையில் ஏன் ரோமம் இல்லை? எனக் கேட்டான்.
அதற்கு விதூஷகன் சாதுர்யமாக "மன்னா அடுத்தவர்க்கு கொடுத்துக் கொடுத்து உங்கள் கைகளில் ரோமம் வளரவில்லை'' என்றான்
Advertisement
Advertisement
அதற்கு மன்னர், "நாட்டு மக்களின் கைகளில் கூட ரோமமில்லையே ஏன்?'' என்றார்.
விதூஷகன் உடனே, "நீங்கள் வாரி வாரி வழங்கும் போது அதை வாங்கி வாங்கி அவர்களுக்கு ரோமம் வளரவில்லை'' என்றான்.
விதூஷகனை மடக்க மன்னன் "அதெல்லாம் சரி, நம் நாட்டு எதிரிகளின் உள்ளங்கைகளிலும் கூட ரோமம் இல்லையே ஏன்? '' எனக் கேட்டு திணறச் செய்தார்.
விதூஷகன் சற்று யோசித்து மன்னா, "உங்களின் வீரம், திறமை, ஆற்றல் இதனையெல்லாம் கண்டு செய்வதறியாது. கைகளைப் பிசைகின்றனர். அதனால் தான் அவர்களின் கைகளிலும் ரோமமில்லை'' என்றதும் விதூஷகனின் நுண்ணறிவைப் பாராட்டினார் மன்னன்
A moral story that children should know.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.