FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகம் அமைதிப்பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது: முதல்வர் ஜெயலலிதா

திருச்சி: முதல்வர் ஜெயலலிதா திருச்சி மேற்கு தொகுதி சட்டசபை அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்சோதி மற்றும் மேயர் வேட்பாளர் ஜெயாவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது; சட்டசபை தேர்தலில் வெற்றி ப

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

திருச்சி: முதல்வர் ஜெயலலிதா திருச்சி மேற்கு தொகுதி சட்டசபை அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்சோதி மற்றும் மேயர் வேட்பாளர் ஜெயாவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது; சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடந்தது.

ஒட்டுமொத்த தமிழகத்தையும் தி.மு.க.,வினர் சூறையாடினர். கடந்த 4 மாதங்களில் தமிழகம் அமைதிப்பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.

நில அபகரிப்பு புகாரில் சிறையில் உள்ள நேருவின் அராஜகங்களை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்படும். 17431 நில அபகரிப்பு புகார்கள் போலீசாரிடம் வந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.,விற்கு ஓட்டுப்போட்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments