தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த சில மீனவர்கள் 20 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்ப்படையினர், இலங்கை கடல் எல்லைக்குள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த சில மீனவர்கள் 20 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்ப்படையினர், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி புகுந்ததாக தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியும், மீன்பிடிவலைகளை அரிவாளால் வெட்டியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மிரட்டினர்.
பின்னர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்து கடலில் வீசி எறி்ந்தனர். பின்னர் அவர்களை எச்சரித்து விரட்டியடித்தனர். இதனால் மண்டபம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.