தூத்துக்குடியில் இன்று மீனவர் குறைதீர் கூட்டம்
தூத்துக்குடி, மார்ச் 3-தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர் கூட்டம் (வெள்ளி) நடைபெறுகிறது.இதுகுறித்து ஆட்சியர் ரவி குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி, மார்ச் 3-தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர் கூட்டம் (வெள்ளி) நடைபெறுகிறது.இதுகுறித்து ஆட்சியர் ரவி குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான மீனவர் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் முற்பகல் 11 மணிக்கு ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், ஊர்த் தலைவர்கள், பெரியவர்கள் தாங்கள் பதிவுசெய்து கொண்டபொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.
மேலும், அப்பொருள் மீதான கருத்துகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மீனவர்கள் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டு குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம் என அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.