FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை தாம்பரத்தில் புதிய முனையம் நாளை தொடக்கம்

சென்னை தாம்பரத்தில் புதிய முனையம் நாளை தொடங்கப்படவுள்ளது. ரயில்வே இணை அமைச்சர்

Updated On : 7 ஜூன் 2018, 6:13 pm IST
பகிர்:

சென்னை தாம்பரத்தில் புதிய முனையம் நாளை தொடங்கப்படவுள்ளது. ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோகெயின் நாளை முனையத்தை தொடங்கி வைக்கிறார். 

தாம்பரத்தில் 3-வது ரயில் முனையம் ரூ.33 கோடியே 28 லட்சத்து 8 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்களின் இயக்கம் அதிகரித் துள்ளது. இதனால், எழும்பூரில் இருந்து கணிசமான ரயில்களின் சேவை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். குறிப்பாக, வடமாநி லங்களுக்கு மொத்தம் 12 ரயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப் படுகின்றன. இவற்றில் கச்சிக்குடா, காக்கிநாடா, கயா போன்ற விரைவு ரயில்களின் சேவை தாம் பரத்தில் இருந்து இயக்க வாய்ப் புள்ளது. பிறகு, தேவையை கருத்தில் கொண்டு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம்- நெல்லை அந்தியோதயா விரைவு ரயிலையும் ராஜன் தொடங்கி வைக்கிறார். சென்னை சென்ட்ரல், எழும்பூரை அடுத்து சென்னையில் அமையும் 3-வது முனையம் தாம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments