முகப்பு
தற்போதைய செய்திகள்

மேகதாது அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கர்நாடகாவிற்கு அனுமதி மறுப்பு

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கர்நாடகாவிற்கு மத்திய அனுமதி மறுத்துள்ளது. 

Updated On : 7 ஆகஸ்ட் 2019, 9:44 am IST
பகிர்:


புதுதில்லி: மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கர்நாடகாவிற்கு மத்திய அனுமதி மறுத்துள்ளது. 

காவிரியின் அனைத்து அதிகாரங்களும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஆணைய அனுமதியில்லாமல் தன்னிச்சையாக அணை கட்ட மத்திய அரசிடம் கர்நாடகம் விண்ணப்பித்ததை ஏற்று ஆய்வுக்கு மத்திய அரசின் நீர்வளத் துறை அனுமதி அளித்தது.

இது அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவதாகும். கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் துணைபோவதை தமிழக அரசு, எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

Advertisement

இந்நிலையில், தமிழக அரசின் எதிப்பை சுட்டிக்காட்டி மேகதாதுவில் அணை கட்டுவற்கு ஆய்வு நடத்த கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.