முகப்பு
தற்போதைய செய்திகள்

துரைமுருகனின் மகன் வெற்றிபெறக்கூடாது என உதயநிதி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்: அமைச்சர் ஜெயகுமார்

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த்

Updated On : 26 ஜூலை 2019, 6:30 pm IST
பகிர்:


வாணியம்பாடி: வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் வெற்றிபெறக்கூடாது என உதயநிதி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

வாணியம்பாடியில் இன்று அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், முத்தலாக் தடை சட்ட மசோதா மூலம் அனைத்து பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதே இலக்கு. இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடுதான் இப்போதும் உள்ளது என்றார்.

மேலும், வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக எவ்வளவு பணம் செலவு செய்தாலும், அதிமுக தான் வெற்றி பெறும். திமுகவில் உட்கட்சி பூசல் நிலவுகிறது. துரைமுருகனின் மகன் வெற்றிபெறக்கூடாது என உதயநிதி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர் என அமைச்சர் ஜெயகுமார் கூறினார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.