முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏழு பேர் விடுதலை: மதுரை எம்.பி.யின் கடிதத்தை உள்துறைக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்தை உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

Updated On : 12 நவம்பர் 2020, 6:44 pm IST
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்
பகிர்:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்கு நவம்பர் 5ஆம் தேதி கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்திற்கு பதிலளித்துள்ள குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்ததாவது,

Advertisement

Advertisement

“உங்கள் கடிதத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.