முகப்பு
தற்போதைய செய்திகள்

‘காபூலிலிருந்து வெளியேறியது திடீர் முடிவு’: ஆப்கன் முன்னாள் அதிபர்

தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றிய நிலையில காபூலிலிருந்து வெளியேறியது திடீர் முடிவு என ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.

Updated On : 31 டிசம்பர் 2021, 12:09 pm IST
ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி
பகிர்:

தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றிய நிலையில காபூலிலிருந்து வெளியேறியது திடீர் முடிவு என ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் ஆப்கனிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள் அந்நாட்டைக் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து நிலவிய அசாதாரண சூழலைத் தொடர்ந்து முக்கிய தலைவர்கள், ராணுவ அதிகாரிகள், மக்கள் என பலரும் ஆப்கனை விட்டு வெளியேறினர்.

அன்றைய அதிபராக இருந்த அஷ்ரப் கனி விமானத்தில் தப்பியோடினார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள அவர் பிரபல தனியார் செய்தி நிறுவனத்திற்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் காபூலிலிருந்து வெளியேறுவது என்பது 2 நிமிடத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

ஆப்கானிஸ்தானின் காபூலைக் கைப்பற்ற தலிபான் முன்னேறி வருவதை அறிந்த நேரத்தில் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற தான் முடிவெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டை விட்டு வெளியேறும்போது எங்கு செல்வது என்பது தனக்கு தெரியாது எனவும், காபூலை விட்டு வெளியேறுவது மட்டுமே அப்போதைய நோக்கமாக இருந்ததாகவும் அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அஷ்ரப் கனியின் முடிவு விமர்சனத்திற்குள்ளான நிலையில் பெட்டிகளில் அடைக்கப்பட்ட பணத்தை தான் எடுத்துச் செல்லவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments