முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து: தமிழ்நாடு அரசு

அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான அனைத்து அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Updated On : 30 ஜூலை 2021, 6:14 pm IST
அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து: தமிழ்நாடு அரசு
பகிர்:

அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான அனைத்து அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

2012 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அரசியல் கட்சித் தலைவர்கள் மீதும் பதியப்பட்டிருந்த அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

அதன்படி அரசியல் கட்சித் தலைவர்கள் மீது பதியப்பட்ட 130 வழக்குகள் ரத்தாகின்றன. 

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயதாரணி, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீது பதியப்பட்ட அவதூறு வழக்குகளும், அதன் மீதான நடவடிக்கைகளும் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.