அரசு பேருந்து மீது சிறுநீர் கழிக்கும் ஓட்டுநர்  
தற்போதைய செய்திகள்

அரசு பேருந்திற்கு சிறுநீரால் அபிஷேகம் செய்த ஓட்டுநர்: வைரலாகும் அதிர்ச்சி விடியோ!

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மீது ஓட்டுநர் ஒருவர் சிறுநீர் கழித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

DIN

கோவை: கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மீது ஓட்டுநர் ஒருவர் சிறுநீர் கழித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை கோவையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் செல்லும் பேருந்து ஒன்று நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு தயாராக வழி தடத்தில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்து கீழே இறங்கிய பேருந்து ஓட்டுநர் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென பேருந்தில் சிறுநீர் கழிக்க துவங்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேருந்து பயணி ஒருவர் அதை செல்போனில் விடியோவாக பதிவு செய்தார்.

மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் தானே நீங்கள் நிலையத்தில் கழிவறைகள் இருக்கும் போது பேருந்தில் இப்படி சிறுநீர் கழிக்கலாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதை கண்டுகொள்ளாத பேருந்து ஓட்டுநர் கோலமிடுவது போல் அரசு பேருந்திற்கு சிறுநீரால் அபிஷேகம் செய்து கடமையாற்றி உள்ளார். அந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை முகம்சுளிக்க வைக்கிறது. செய்யும் தொழில் தெய்வம் இல்லையா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT