டிஎன்பிஎஸ்சி(கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்!

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு தேதி மாற்றம் தொடர்பாக...

DIN

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு கடந்த செப்.14 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது.

இந்தத் தேர்வை எதிா்கொள்வோா் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய டிச. 18-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு பிப். 2, 8 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், முதன்மைத் தேர்வு தேதி மற்றும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு பிப். 8 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 வரை நடைபெறவுள்ளது.

அதேபோல், குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான முதல் தாளான தமிழ் மொழி தகுதித் தேர்வு பிப். 8 பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும் என்றும், முதன்மைத் தேர்வுக்கான இரண்டாம் தாள், பிப். 23 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் 37 மையங்களில் நடைபெறவுள்ளது.

முன்னதாக கணினி வழியில்(CBT Mode) குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஓஎம்ஆர் ஷீட் (OMR Sheet) முறையிலேயே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்து மோதி வளையல் வியாபாரி பலி

மேல்மலையனூா் கோயிலில் மாசித் திருவிழா தோ் செய்யும் பணி தொடக்கம்

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, சணல் ஏற்பாடு செய்ய கோரிக்கை

கும்பகோணத்தில் முதல்வா் ஸ்டாலினுக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு

திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாது: துரை வைகோ

SCROLL FOR NEXT