படம் | ஏஎன்ஐ
தற்போதைய செய்திகள்

நாக்பூர்: வெடி மருந்து தொழிற்சாலை தீ விபத்தில் 6 பேர் பலி!

நாக்பூர் அருகே வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.

DIN

மகாராஷ்ரத்தின் நாக்பூரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நாக்பூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ஹிங்கனா காவல்நிலையத்துக்குள்பட்ட தாம்னா கிராமத்தில் உள்ள சாமுண்டி வெடிமருந்து தொழிற்சாலையில் பிற்பகல் 1 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டது.

பலத்த காயமடைந்த 9 பேர் அருகிலுள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரவீந்திர சிங்கால் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 5 பெண்கள் உள்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர்.

வெடி விபத்து நிகழ்ந்தபோது, ​​பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தொழிற்சாலையின் பேக்கேஜிங் பிரிவில் பணிபுரிந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது!

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! ரூ. 95 ஆயிரத்தை நெருங்கியது! வெள்ளி விலை ரூ. 206

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக வாழ்வார்கள்! டிரம்ப்

காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை! 11 நாள்கள் விவரம்...

SCROLL FOR NEXT