ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
டிரெய்னி மற்றும் ப்ராஜெக்ட் பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி மற்றும் ப்ராஜெக்ட் பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியாளர் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.383/hr/ns(s&cs)
பணி: Trainee Engineer-I
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ. 30,000 - 40,000
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணி அறிவியல் போன்ற பிரிவுகள் ஏதாவதொன்றில் பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Engineer-I
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 55,000
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணி அறிவியல் போன்ற பிரிவுகள் ஏதாவதொன்றில் பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 23.3.2024