காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் ஐவார் பாணியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர். 
தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

DIN

பென்னாகரம்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநில கரையோர நீர்ப்பிடிப்புப் பகுதியில் திடீரென பெய்த மழை, கர்நாடக அணைகளில் நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவானது சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 6,500 கன அடியாக இருந்து நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, நீர்வரத்து திடீரென அதிகரித்து விநாடிக்கு 14,000 கன அடியாக தமிழக,கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐவார் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

43 ஆண்டுகளுக்குப் பின்..! டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா மறுவெளியீடு!

ராகுலை எம்.பி பதவியிலிருந்து நீக்க வேண்டும்!: பாஜக | செய்திகள்: சில வரிகளில் | 12.02.26

தமிழ்நாடு vs தேஜகூ! பட்ஜெட்டில் ‘ஜீரோ’ கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போமா? - முதல்வர் ஸ்டாலின்

டொவினோ தாமஸ் - கயாது லோஹர்..! பள்ளிச்சட்டம்பி முதல் பாடல்!

நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்! புதிய தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிர்ப்பு!

SCROLL FOR NEXT