தற்போதைய செய்திகள்

தஞ்சையில் தொடர் மழை: நீரில் மூழ்கிய பயிர்கள்!

சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

DIN

தொடர் மழையால் சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(நவ. 26) காலைமுதல் இடைவிடாமல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்தத் தொடர் மழை காரணமாக நெய்வாசல், தலையாமங்கலம் வாண்டையார் இருப்பு, காட்டூர், கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாற்றுநட்டு சுமார் 30 நாள்களே ஆன இளம் பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கியுள்ளது.

வல்லம் வடிகால் வாய்க்காலிலும் மழை நீர் நிரம்பி செல்வதால், தண்ணீர் வடியாமல் விளைநிலங்கள் முழுவதும் கடல் போல் காட்சியளிக்கிறது. விளைநிலங்களா அல்லது ஏரியா என்று தெரியாத அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு 25,000 வரை செலவு செய்து நடவு செய்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் அடித்து செல்லப்படுவதாகவும், நீரில் மூழ்கி இருப்பதால் தொடர்ந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, பெய்த மழையினால் பயிர்கள் அழுகிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே வேளாண் துறை அதிகாரிகள் இப்பகுதியை கணக்கீடு செய்து ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பரந்தூா் விமான நிலையத்துக்காக களி ஏரியை வகைமாற்றம் செய்யத் தடை கோரி மனு

கல்லூரி மாணவரைத் தாக்கி பணப் பறிப்பு: இருவா் கைது

அண்ணா பல்கலை. கல்லூரிகளில் புதிய பாடங்கள் அறிமுகம்: செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் கட்டாயம்

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை எஸ்எம்சி கூட்டம்

சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் 12 மணிநேரம் மூடல்

SCROLL FOR NEXT