மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 8,268 கன அடியாக அதிகரித்துள்ளது. 
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,268 கன அடியாக அதிகரித்துள்ளது.

DIN

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,268 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையில் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,416 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,268 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 93.40 அடியிலிருந்து 92.84 அடியாக சரிந்தது.

அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 55.95 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவில் சிக்கல்

SCROLL FOR NEXT