முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,268 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 5 அக்டோபர், 2024 at 3:17 AM
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 8,268 கன அடியாக அதிகரித்துள்ளது.
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,268 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையில் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,416 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,268 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 93.40 அடியிலிருந்து 92.84 அடியாக சரிந்தது.

அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 55.95 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.