ஒகேனக்கல், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

DIN

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இன்று(அக். 13) காலை 6 மணி நிலவரப்படி, வினாடிக்கு சுமார் 8,000 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்த நிலையில், காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரித்ததால், அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது.

கர்நாடக அணைகளின் நீர் திறப்பு மற்றும் கரையோர வனப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஜிட்டல் அரெஸ்ட்: சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்: மு.க. ஸ்டாலின்

நிரந்தர ஒளி... கேப்ரியல்லா!

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 3 குவாஹாட்டி பல்கைக்கழக பேராசிரியா்கள்!

நேபாளத்தில் நிலச்சரிவு: உயிரிழப்பு 50-ஐ கடந்தது!

SCROLL FOR NEXT