விசாரணையில் காவல் துறையினர் படம்: டிடி நியூஸ்
தற்போதைய செய்திகள்

சிமெண்ட் துண்டுகளை வைத்து சரக்கு ரயிலை கவிழ்க்க சதி!

70 கிலோ சிமெண்ட் துண்டுகளை வைத்து சரக்கு ரயிலை தடம்புரள வைக்க முயற்சி!

DIN

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் ரயில் தண்டவாளத்தில் தலா 70 கிலோ சிமெண்ட் துண்டுகளை வைத்து சரக்கு ரயிலை தடம்புரள வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிமெண்ட் துண்டுகள் மீது சரக்கு ரயில் மோதி நிலையிலும், எந்தவித சேதமுமின்றி ரயில் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்துள்ளது.

ரயில்வே ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே சட்டம் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தலை தடுக்கும் சட்டம் ஆகியவற்றின் கீழ் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

சிமெண்ட் துண்டுகள்.

இந்த சம்பவம் ஃபுலேரா-அகமதாபாத் வழித்தடத்தில் சாரத்னா மற்றும் பங்காத் ரயில் நிலையங்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.

முதலில் ரயில்வே தண்டாளத்தில் சிமெண்ட் துண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, சிமெண்ட் துண்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

இந்த ரயில் கவிழ்ப்பு சதி தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல, உத்தர பிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் நிரம்பிய பாட்டில் ஆகியவை வைக்கப்பட்டு, காளிந்தி விரைவு ரயிலைக் கவிழ்ப்பதற்கான சதி முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில்நுட்பப் பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,737 போ் பங்கேற்பு

வாணியம்பாடி: மாவட்ட பாஜக அலுவலகத்தில் இல.கணேசனுக்கு அஞ்சலி

யமுனை நீா்மட்டம் தில்லியில் எச்சரிக்கை அளவைக் கடந்தது!

வடகிழக்கு தில்லியில் மைத்துனா்கள் கொலை வழக்கில் 4 போ் கைது

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா

SCROLL FOR NEXT