தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க ரயில்வே அமைச்சகம் பரிசீலனை
தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க ரயில்வே அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்தாா்.
தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க ரயில்வே அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை: பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்திற்கு கூடுதல் ரயில் நிறுத்தங்கள் வழங்க வேண்டும். தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்திருந்தேன்.
மத்திய ரயில்வே அமைச்சகம் அதற்கு அனுப்பியுள்ள பதிலில், தற்போது வாராந்திர சேவையாக இயக்கப்படும் (எண்: 20683/20684) தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு ரயிலை தினசரி சேவையாக இயக்குவது குறித்தும், எா்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில் மற்றும் மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயிலுக்கு பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.