முகப்பு
தற்போதைய செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கி கார்த்திக் முதலிடம்!

19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்திக் முதலிடம்

Updated On : 14 ஜனவரி 2025, 6:32 pm IST
பகிர்:

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்திக் முதலிடம் பெற்றுள்ளார்.

பொங்கல் பண்டிகையன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி 11 சுற்றுகளுடன் நிறைவடைந்துள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி முதலிடமும் 15 காளைகளை அடக்கி குன்னத்தூர் அரவிந்த் திவாகர் இரண்டாமிடமும் 13 காளைகளை அடக்கி திப்புவனம் முரளிதரன் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்!

இந்த ஆண்டு தமிழக முதல்வர், துணை முதல்வர் சார்பில், பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர், சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு அளிக்கப்படுகிறது.

இரண்டாம் பரிசு பெற்றவருக்கு இருசக்கர வாகனம் பரிசு அளிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.