பாலமேடு ஜல்லிக்கட்டு: 7 வீரர்கள் தகுதி நீக்கம்!
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாக...
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாட்டுப் பொங்கல் திருநாளான இன்று (ஜன. 15) பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியானது 10 சுற்றுகளாக நடத்தப்படவுள்ளன.
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் பாதுகாப்புப் பணிகளுக்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக, மதுரை மட்டுமன்றி, தேனி, திண்டுக்கல், விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது!
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்று நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
3 பேர் மது அருந்தியதாகவும் 3 பேர் எடைக் குறைவு என்ற காரணத்தாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.